Friday, 3 February 2012

தமிழ் சமையல்






வெங்காய சாம்பார்


தேவையானப்பொருட்கள்:

சாம்பார் வெங்காயம் - 15 அல்லது 20, தக்காளி நடுத்தர அளவு – 1,  பச்சை மிளகாய் – 2, துவரம் பருப்பு - 1 கப் , புளி - ஒரு சிறுஎலுமிச்சம்பழ அளவு, சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன் மஞ்சள்த்தூள் - 1/4டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன் க‌டுகு - 1/2 டீஸ்பூன்  பெருங்காய‌த்தூள் -‍ஒரு சிட்டிகை க‌றிவேப்பிலை – சிறிது  கொத்த‌ம‌ல்லித்த‌ழை - சிறிது

செய்முறை:


துவரம்பருப்பை நன்றாகக் கழுவி, அத்துடன் 2 கப் தண்ணீர், சிறிது மஞ்சள்த்தூள் சேர்த்து, குக்கரில் வேக வைக்கவும்.
புளியை ஊறவைத்து, கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். 2 கப் அளவிற்கு புளித்தண்ணீர் இருக்கவேண்டும்.
வெங்காயத்தை தோலுரித்து, முழுதாக வைத்துக் கொள்ளவும். தக்காளியை நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில், இரண்டாக நறுக்கி வைக்கவும்.

ஒரு வாண‌லியில் எண்ணை விட்டு (ந‌ல்லெண்ணை உப‌யோகித்தால், வாச‌னையாக‌ இருக்கும்) சூடான‌தும் க‌டுகு போட‌வும். க‌டுகு வெடித்த‌வுட‌ன், பெருங்காய‌த்தூள், வெங்காய‌ம், ப‌ச்சை மிள‌காய், க‌றிவேப்பிலைச் சேர்த்து வ‌த‌க்க‌வும். வெங்காய‌ம் ச‌ற்று வ‌த‌ங்கிய‌வுட‌ன், த‌க்காளித்துண்டுக‌ளைச் சேர்த்து ஒரு நிமிடம் வ‌த‌க்க‌வும். பின்ன‌ர் அதில், புளித்த‌ண்ணீர், சாம்பார் பொடி, ம‌ஞ்ச‌ள்த்தூள், உப்புச் சேர்த்து, மூடி வைத்து, மித‌மான‌ தீயில் கொதிக்க‌ விட‌வும். குழ‌ம்பு கொதிக்க‌ ஆர‌ம்பித்த‌தும், வெந்த‌ப் ப‌ருப்பை ம‌சித்து சேர்க்க‌வும். ந‌ன்றாக‌க் கிள‌றி மீண்டும் கொதிக்க‌ விட‌வும். சாம்பார் கொதித்து, ச‌ற்று கெட்டியான‌தும், கீழே இற‌க்கி, கொத்தும‌ல்லித் த‌ழையைத் தூவ‌வும்.

வெண்டைக்காய் வறுவல்



தேவையானப்பொருட்கள்:

வெண்டைக்காய் - 10 முதல் 15 வரை
கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

வெண்டைக்காயை கழுவி துடைத்து விட்டு நீள வாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கியத் துண்டுகளை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு அத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், உப்பு, அரிசி மாவு, கடலை மாவு ஆகியவற்றைப் போட்டு கைகளால் நன்றாகக் கிளறி விடவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. வெண்டைக்காயின் பிசுக்குத் தன்மையிலேயே மாவு காயின் மேல் ஒட்டிக் கொள்ளும்.
ஒரு வாணலியில் எண்ணையைக் காய வைத்து, அதில் ஒரு கை வெண்டைக்காய் கலவையை எடுத்து தனித்தனியாக உதிர்த்து விடவும். மிதமான தீயில் அடுப்பை வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

காலிஃபிளவர் வறுவல்


தேவையானப் பொருட்கள்:

காலிஃபிளவர் – 1                     
இஞ்சிப்பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மைதா - 1 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு - 1 டேபிள்ஸ்பூன்
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு 

செய்முறை:

காலிஃபிளவரை நடுத்தரத்துண்டுகாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு, காய் மூழ்கும் வரை தண்ணீர் சேர்க்கவும். சிறிது உப்புப் போட்டு 2 அல்லது 3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். நீரை வடித்து விட்டு காலிஃபிளவர் துண்டுகளை வாயகன்ற பாத்திரத்தில் போடவும்.
அதில் இஞ்சிப்பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, மைதா, அரிசிமாவு, சோளமாவு சேர்த்து நன்றாக பிசறி வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணையைக் காய வைத்து, பிசறி வைத்துள்ள காலிஃபிளவர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். 

சேப்பங்கிழங்கு வறுவல்





தேவையானப்பொருட்கள்:

சேப்பங்கிழங்கு - 8 முதல் 10 வரை
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணை - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

சேப்பங்கிழங்கை, குக்கரில் போட்டு, கிழங்கு மூழ்கும்வரை தண்ணீரைச் சேர்த்து, 3 அல்லது 4விசில் வரும் வரை வேக விடவும். ஆறியதும், தோலை உரித்து, நீளவாக்கில் இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு, க்டுகு போடவும். கடுகு வெடித்தவுடன், கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் வேக வைத்த கிழங்கைப் போட்டு அத்துடன், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும். அடுப்பை, சிறு தீயில் வைத்து, அவ்வப்பொழுது கிளறி விட்டு, கிழங்கு சிவக்க வறுபடும் வரை அடுப்பில் வைத்திருந்து இறக்கி வைக்கவும்.

குறிப்பு:

இத்துடன், ஒரு பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, கடுகு தாளிக்கும் பொழுது சேர்த்து வதக்கியும் செய்யலாம்.

வேர்க்கடலை பகோடா 




தேவையானப்பொருட்கள்:

கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
வேர்க்கடலை - 1 கப்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, வேர்க்கடலை, மிளகாய்த்தூள், பெருங்காய்த்தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு ஒன்றாகக் கலக்கவும். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் சூடான எண்ணையை விட்டு, மீண்டுன் கலக்கவும். பின் அதில் சிறிது நீரைத் தெளித்து கெட்டியாகப் பிசைந்துக் கொள்ளவும். 

வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், மாவை எடுத்துக் கிள்ளிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.


புதினா உருளைக்கிழங்கு கறி


தேவையானப்பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2புதினா - ஒரு கைப்பிடி அளவுபெரிய வெங்காயம் - 1தக்காளி – 1 இஞ்சி - சிறு துண்டுபூண்டுப்பற்கள் – 2 கறிவேப்பிலை - சிறிதுசாம்பார் பொடி - 2டீஸ்பூன் மஞ்சள் தூள்: - 1/4 டீஸ்பூன்உப்பு - 1 டீஸ்பூன் எண்ணை - 4 டீஸ்பூன கடுகு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு இரண்டையும் நசுக்கி வைக்கவும்.
வெங்காயம், தக்காளி யை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன் வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதக்கி அத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கவும். தக்காளி நன்றாகக் குழைந்து சேர்ந்தபின் அதில் புதினா இலைகளைப் போட்டு சற்று வதக்கவும். அத்துடன் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு கிளறவும். அடுப்பை சிறு தீயில் வைத்து உருளைக் கிழங்கு நன்றாக சிவக்கும் வரை அவ்வப்பொழுது கிளறி விட்டு இறக்கி வைக்கவும்.

புதினா சட்னி 








தேவையானப்பொருட்கள்:

தேங்காய்த்துருவல் - 1/4 கப்
புதினா - 1 கப்
பச்சை மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
புளி - நெல்லிக்காயளவு
பெருங்காயம் - ஒரு பட்டாணியளவு (கெட்டிப் பெருங்காயம் இல்லையென்றால் பெருங்காய்த்தூள் 1/2 டீஸ்பூன்)
உப்பு - 1/4 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணை விட்டு அதில் பெருங்காயம், பருப்பு ஆகியவற்றை போட்டு சிவக்கும் வரை வறுக்கவும். பருப்பு சிவந்தவுடன், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். பச்சை மிளகாயின் நிறம் சற்று மாறியவுடன், புதினாவைச் சேர்த்து ஒரு நிமிடம் வத்க்கவும். பின்னர் அதில் புளி, தேங்காய்த்துருவல் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக மீண்டும் ஓரிரு வினாடிகள் வதக்கி, இறக்கி வைத்து ஆற விடவும். சற்று ஆறியவுடன் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்தெடுக்கவும். 
பூண்டு சட்னி 


பாசிப்பருப்பு பக்கோடா





தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1 1/2
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
இஞ்சி - அரை இன்ச்
தனியா - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:


* பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

 * பாசிப்பருப்பு ஊறியதும் தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அதனுடன் தனியா, உப்பு, இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

* அரைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு பிசைந்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து எண்ணெயில் உதிர்த்து விடவும்.

 * இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும்.

 * சுவையான வித்தியாசமான பாசிப்பருப்பு பக்கோடா தயார்



ரசப் பொடி


தேவையான பொருட்கள்:

மஞ்சள் - 50 கிராம்
தனியா - 400 கிராம்
மிளகாய் வற்றல் - 250 கிராம்
மிளகு - 50 கிராம்
சீரகம் - 100 கிராம்
துவரம் பருப்பு - 250 கிராம்

செய்முறை:


* இவற்றை வெயிலில் நன்கு காய வைத்து நைசாக அரைத்துப் பொடியாக்கினால் ரசப் பொடி தயார்.

* காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து தேவைக்கேற்ப உபயோகிக்கலாம்

பாகற்காய் தக்காளிப் புளிக்கறி




தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 250 கிராம்
தக்காளிப்பழம் - 250 கிராம்
வெங்காயம் - 5
பூண்டு - 10
வெந்தயம் - 2
மிளகாய் வத்தல் - 5
கறிவேப்பிலை - சிறிது
புளி - 25 கிராம்
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
மிளாகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
நீர் - தேவைக்கேற்ப

செய்முறை:


முதலில் பாகற்காயை கழுவி வட்ட வட்டமாக வெட்டவும். தக்காளியையும் கழுவி வெட்டவும். வெங்காயம் பூண்டு, மிளகாய் எல்லாவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். புளியை நீரில் கரைத்து அளவாக எடுத்து வைக்கவும். அதன் பின் வாணலியை அடுப்பில் வைத்து எணணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். வதங்கி பொன் நிறமாக வரும் போது பூண்டை சிறிது தட்டி அதனுடன் சேர்த்து வெந்தயத்தையும் போட்டு நன்கு கிளறிக் கொண்டே மிளகாய்த் தூள், உப்புதூள், கரைத்த புளி இவற்றையும் சேர்த்து கறியை நன்கு கிளறி மூடி 5 நிமிடம் வேக விடவும். பின்னர் வற்றியதும் நறுக்கிய தாக்காளியையும் சேர்த்து வேக விடவும். பின்னர் ஆறவிட்டு பறிமாறலாம். சாதம், சாப்பாத்தி, தோசை இவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

பட்டன் மஷ்ரூம் 


தேவையான பொருட்கள்:

பட்டன் மஷ்ரூம் - 200 கிராம்
சோள மாவு - 2 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் - 2 டீ ஸ்பூன்
வெங்காயம் - 1
பால் - 1\4 கப்
பூண்டு - 5 பல்
சீரகத்தூள் - 1 டீ ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:


* பட்டன் மஷ்ரூம், வெங்காயம், பூண்டு இவற்றை தனித்தனியே பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கடாயில் நான்கு டீ ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

* இதில் மஷ்ரூம், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்­ரை தெளித்து வேக விடவும்.

* சோள மாவில் பால் சேர்த்துக் கரைத்து, வெந்த மஷ்ரூமில் ஊற்றி நன்றாகக் கிளறி இறக்கவும்.

* கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

* இது பிரெட் டோஸ்டுக்கு ஏற்றது.

* வதக்கும்போது கால் கப் பனீர் துண்டுகளை சேர்த்து செய்தால் சுவை அருமையாக இருக்கும்..

புடலங்காய் கட்லெட்




தேவையான பொருட்கள்:

பொட்டுக்கடலை மாவு - 1 கப் 
புடலங்காய் - 1 
பட்டை - 1 துண்டு 
கிராம்பு - 1 
பச்சை மிளகாய் - 3 
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

* பச்சை மிளகாய், பட்டை கிராம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
* இத்துடன் பொடியாக நறுக்கிய புடலங்காயைச் சேர்த்து அரைத்து உப்பு, பொட்டுக் கடலை மாவு இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது தண்ணீ­ர் தெளித்து பிசையவும்.
* பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு நன்கு சிவந்ததும் எடுத்தால் கட்லெட் ரெடி.
* சுவை அபாரமாக இருக்கும்.



1 comment:

  1. உணவு வகைகள் அனைத்தும் அருமை. நான் தினமும் சமையல் குறிப்புகளுக்காக பயன்படுத்தும் இணையதளம்.http://www.valaitamil.com/recipes. நீங்களும் பாருங்கள்.பகிருங்கள்.

    ReplyDelete